உறுப்பினர்கள்

மனிதர்களிடம் மதங்கள் படும் பாடு



மதம் பிடித்த மனிதர்களிடம் மதங்கள் படும் பாடு 
 
மனிதன் நேரிய வழியில் நடக்கவும், மனிதனை நெறிமுறைப் படுத்தவும், இறைவனுக்கு அஞ்சி வாழவும், இறைவனால் வகுக்கப் பட்டது தான் மதங்கள்..ஆனால் இன்றோ அந்த மதங்களே மனிதர்களிடத்தில் மாட்டிக் கொண்டு பெரும் பாடு படுகிறது, இது குறிப்பிட்ட ஒரு மதத்தில் என்று இல்லை,பல தெய்வ கொள்கையுடையவர்கள் முதல் இன்று ஒரு தெய்வ கொள்கையுடையவர்கள் வரை இந்நிலை வந்து விட்டது, பெரும்பான்மையாக அதிக என்ணிக்கையுள்ள மக்கள் உள்ள மதங்கள் இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் போன்ற மதங்ளே ! அதனால் இம்மூன்றை பற்றி மட்டும் மூன்று காலங்களாக அறிய சில.. 
இந்து :  
1)
ஆரம்ப காலம் : இந்துகளில் உள்ள மக்கள் பின்பற்ற அவர்களுக்கும் வேதங்கள் உள்ளன, இவர்களின் இவ் வேதம் மிகவும் பழமையானதுவும் கூட, இந்த பழமையான வேதத்திலும் கூட சிலை வடிக்க வேண்டும் என்பதைப் பற்றியோ இறைவனுக்கு உருவம் உண்டு என்பதைப் பற்றியோ சொல்லப்படவில்லை.. மாறாக பரிசுத்தமான இறைவன் உருவமற்றவன் என்றும், அவன் ஒருவனே என்றும் வேதங்களிலும் புராண இதிகாசங்களிலும் ரிஷிகள், முனிவர்கள் போன்றோர்களின் கூற்றுக்களிலும் தெரிய வருகிறது , (இதை பற்றிய விளக்கம் "இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள ஒற்றுமை" என்ற தலைப்பில் விரிவாக காணலாம்) இவ்வேதங்களில் உள்ள கருத்துக்களயும், அதனால் விவரிக்கப்பட்ட சட்டங்களையும் எடுத்து நடக்கின்ற ஆச்சாரிய மக்களும் நல்லொழுக்கமுள்ள இறை பக்தியாளர்களும், இறையச்ச முடையவர்களும்  இருந்தனர், இப்போதும் இருக்கலாம்...
2)
அடுத்தடுத்த காலம் இக்காலங்களில், அவ்வேதங்களில் கூறப்பட்ட பல விஷயங்களை மாற்றி அமைத்துக் கொண்டும், பல சொல்லப் படாத விஷயங்களை இவர்களாக ஏற்றி அமைத்துக் கொண்டும், பிறகு கருத்துக்கள் மாற, பிறகு பிளவுபட, பிறகு வேதங்களை ஏற்றுக் கொண்ட அந்த மக்களுக்கிடையில் பல ஜாதிகளாக மாறி, ஜாதிக்கொரு கடவுளாக ஆகி இன்று பல தெய்வ கொள்கையுடையவர்கள் இந்துக்கள் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகிவிட்டது ! ஜாதிக்கொரு கடவுள், கடவுளுக்கென்று தனிக் கோயில் என்று பல பிரிவாக இருந்தாலும் இந்துக்கள் என்று சொல்லப் படும் இவர்கள் சில முக்கிய விஷயங்களில் ஒன்று பட்டே இன்று வரை இருக்கின்றனர். இவர்களுக்குள் ஒன்று பட்ட விஷயங்கள் மூன்று,
1)
இறைவனுக்கு கற்பனையால் உருவம் கற்பிப்பது  
2)
கற்பித்த கடவுளை கற்சிலையால் வடிப்பது மற்றும் 
3)
கடவுளை அடைய சில சித்தாந்தங்களையும் ஐதீகங்களையும் பின் பற்றுவது,  
இந்துக்களில் எத்தனைப் பிரிவு இருந்தாலும் மேற்கூறப்பட்ட இந்த முக்கிய மூன்றையும் மட்டும் மாறாமல் எடுத்து நடப்பார்கள்.
3)
இன்றைய காலம் : இப்படி இந்துக்களின் உண்மையான கரு மாறி உரு மாறி வந்துவிட்ட இந்த கலியுக காலத்திலும் கூட தாலி கட்டும் போதும்,புதுவீடு புகும் போதும்,கோவில்களில் அர்ச்சனை செய்யும் போதும் இன்னும் பல யாகங்களின் போதும் இந்துக்களின் வேத மொழியான சமஸ்கிருத மொழியிலேயே நடத்தப் பட்டு வருகிறது இன்று புதிதாக மதத்தை படித்தவர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் தேவையில்லை என்ற புதிய கொள்கை யுடையவர்களால் இன்று பல கோயில்களில் பிரச்சனை எழுந்து அடிதடி கலாட்டா வரை வந்ததை யாவரும் அறிந்துள்ளோம்.அன்றைய பழமையான வேதமாகிய பகவத் கீதையிலும் அதை சார்ந்த வேத ஆகமங்களிலும் உள்ள உண்மை அன்றிலிருந்து குழப்பவாதிகளால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப் பட்டு மறுக்கப்பட்டு மறைக்கப் பட்டு இறைவன் சொன்ன கரு மாறி கருத்து மாறி கற்பனையால், கண்டதயும் கடவுளாக்கிக் கொண்ட பின்பும் கூட இன்றும் குழப்பங்கள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது.அதற்கு காரணம் அடிப்படையிலேயே சிலை வணங்குபவர்கள் இறைவனுக்கு உருவம் கற்பிப்பதனால் ஆளுக்கொரு உருவத்தை எடுத்துக் கொண்டு அதனால் என் கடவுள் பெரியதா உன் கடவுள் பெரியதா என்று வரும் போது சண்டைச் சச்சரவுகள் குழப்பங்கள் வரத்தான் செய்யும், இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை

கிருஸ்துவம் : 

 (
ஆரம்ப கால கிரிஸ்துவம்) ஜீஸஸ் என்னும் யேசு (நபி ஈஸா) வந்ததின் பின், முன்னால் வந்த வேதங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட இறைவனையும் இறைவனின் கட்டளைகளுக்கு மாற்றமாக நடந்து கொண்ட மக்களையும் மக்களால் உருவாக்கப்பட்ட பல ஜாதிகளையும் ஜாதிக்களுக்கென்று கடவுள் கொள்கைகளையும் சிலைகளையும் பற்றி விளக்கப்படுத்தப்பட்டு மக்களின் மூட நம்பிக்கைகளை, வழிபாடுகளை களைந்து பரிசுத்தவான்களாக மாற்றினார்கள்.. அன்றிலிருந்து இயேசுவை (நபி ஈஸவை)பின்பற்றியவர்கள் மூட நம்பிக்கைகளையும் சிலை வணக்கங்களையும் விட்டொழித்தார்கள் மேலும் ஒரே இறைவனை மறக்கவும் மறுக்கவும் செய்தது (ஷைத்தான்) சாத்தானின் சூழ்ச்சிகள் என்பதை உணர்ந்துக் கொண்டார்கள்.  யேசு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள், நோயாளியை குணப்படுத்துவது, கொடிய நோயான குஷ்டம் தனது திருக்கரங்களால் தொட்டவுடன் குஷ்டம் மறைந்து அழகானவராக நோயாளியை மாற்றியது, பிரவிக் குருடனுக்கு பார்வை கிடைக்கச் செய்தது, வாதம் அடித்ததினால் நடக்க முடியாமல் போனவரை பூர்ணமாக நடக்கச் செய்தது, போன்ற பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியுள்ளார்கள் இன்னும் மேலாக இறந்தவர்களையே உயிர்பித்துக் காட்டினார்கள்,
இறைவனுக்கே உரிய இவ்வாற்றல்களை அற்புதங்களை இயேசு செய்து காட்டியதும், மேலும் தந்தையில்லாமல் இறையானைப் படி பரிசுத்த மேரியின் வயிற்றில் பரிசுத்த ஆவியை (ஈசா ரூஹுல்லாவை) புகுத்தியதின் காரணத்தாலும் இறைவனின் குமாரன் என்றே முடிவுக்கு வந்தனர், மேலும் தனக்கு தந்தை இல்லை என்று இருந்த இயேசு (நபி ஈஸா) வுக்கு கருனையுள்ள இறைவன் தந்தையாக விளங்கினான்,இது இறைவனது கருணையையே குறிக்கும், அவனது கருணைக்கு உதாரணமனது, ஒரு தாய் தன் பிள்ளையின் மீது எவ்வளவு அன்பும் பாசமும் காட்டுவாளோ அதைவிட (எழுபது) 70 மடங்கு நான் என் அடியான் மீது அன்பு வைத்திருக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான். அதற்காக இறைவனை நம்முடைய தாய் என்று நாம் எப்படி சொல்ல முடியாதோ அதே போல் தகப்பனில்லாமல் பிறந்த காரணத்தினால் கடவுளை தகப்பனாக்கி விடவும் முடியாது, இறைவன் நாடினால் இதைவிடவும் எதையையும் செய்ய முடியும் என்று நாம் நம்ப வேண்டும் அவனுக்கு இதுவும் எதுவும் ஒரு பெரிய காரியம் கிடையாது, அனாதைகளுக்கு ஆதரவாளனாக இருக்கிறான், ஏழைகளுக்கும் உணவளிக்கும் இரக்கமுடையவனாக இருக்கிறான் அனாதைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் கூட அவர்களது தேவைகளை யார் மூலமாவது பூர்த்தி செய்கிறான் இன்னும் எல்லோருக்கும் எஜமானனாக இருக்கிறான்
பெற்ற தாயும் தந்தையும் இல்லாத ஒரு அனாதை குழந்தைக்கு எடுத்து வளர்ப்பவரே தந்தையாக விளங்குவார் அதனால் அவர் உண்மையிலேயே பெற்ற தந்தையாகிவிட முடியாது அது போல் யாவற்றையும் படைத்த இறைவன் இவரை (ஈஸாவை) தந்தையில்லாமல் படைத்ததினால் இறைவனே தந்தையாகிவிட முடியாது,
அவர்களின் மறைவுக்குப் பின்னால் (கடவுளாகிய) கர்த்தரின் மகனாகவே போற்ற ஆரம்பித்துவிட்டார்கள், மேலும் ஏற்கெனவே சிலை வணக்கத்தை விட்டொழித்த அதே மக்கள் யேசுவுக்கும் சிலை வைக்கலானார்கள், கடவுளுக்கு உருவம் கற்பித்து, கடவுளின் மகனாக ஆக்கிவிட்ட யேசுவுக்கும் சிலை வைத்து வணங்க ஆரம்பித்ததின் விளைவு .. இன்று கிருஸ்துவ மதத்திலும் பல கொள்கைகளும் குழப்பங்களும் கொண்ட பல்வேறு  கூட்டங்கள் உருவாகி ஒருவருக்கொருவர் தனது கொள்கைதான் பெரிது என்று வாதித்திட்டு ஜெயித்து பெருமையும் புகழ்ச்சியும் தேடுவதற்காக கிருஸ்தவர்களுக்குள்ளேயே அடி தடி பிரச்சனைகள் ...
(தொடரும்...)      

1 comment:

  1. உலகை படைத்தது பிரம்மாவா அல்லது அல்லாஹ்வா?

    https://www.youtube.com/watch?v=6Kppjgkrzgw&index=66&list=PLw_oR2PvIg_JtLaOMn4mUK5HuPF2ja6jY

    ReplyDelete