இனிய இஸ்லாத்தைப் பற்றி நான் எழுத
வேண்டுமானால் என் இறுதி மூச்சுவரை எழுதிக் கொண்டே இருந்தாலும் முடிக்க முடியுமா
என்பது சந்தேகமே! ஏனெனில் இஸ்லாத்தில் எழுவது பற்றியும், தொழுவது பற்றியும் மட்டும் கூறி விட்டுவிடவில்லை, மாறாக உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் சொல்லப்படாமல் இல்லை.
அறிவியல், ஆய்வியல், உளவியல், பொறியியல்,
இயற்பியல்,
வேதியல், உயிரியல், வானம், மண்டலம், நட்சத்திரம்,
பூமி, கடல், காற்று, வெள்ளம், பிரளயம், நில நடுக்கம்,
வாழ்க்கை, பெற்றோர், பெரியோர், பேணிக்காப்போர், கற்றோர், கல்லாதோர்,
ஏழை, பணக்காரன்,
தொழில், துறை, வியாபாரம்,
குடும்பம்,
கணவன், மனைவி, மக்கள், திருமணம், மறுமணம், மரணம் என்றும் நில்லாமல் மரணத்திற்குப்
பின்னுள்ள கேள்வி கணக்கு, நீதி தீர்ப்பு சொர்க்கம், நரகம் என்று மனிதனின் முழு பிறப்பிற்கான அர்த்தத்தையும், அர்த்தமுடன் வாழும் சூத்திரத்தையும், (ஷரியத்) சூத்திரத்திற்கான ("லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராக இருக்கிறார்கள் )
என்னும் மூல மந்திரத்தையும் தந்து, மனிதன் என்ற படைப்பானவன் மற்ற படைப்பினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன், வேறுபட்டவன் என்று மட்டும் நில்லாமல் படைப்பினங்களிலெல்லாம் மிக உயர்ந்த
படைப்பானவன் என்றும் அந்த உயர்ந்த படைப்பான
மனிதனும், வீணுக்காக படைக்கப்படவில்லை என்றும் (நாம்
உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா ? (குர்ஆன்
23:115) இதை பறைசாற்றும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்தும்
காட்டினார்கள், அதன்படி வாழவும் சொன்னார்கள், வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இத்தனைக்
காலம் எத்தனையோ புத்தகங்கள் எம்பெருமானாரைப் பற்றி வெளிவந்து விட்டது, என்ற போதிலும் யாரும் அவர்களைப் பற்றி முழுமையாக எழுதிவிட முடியாது! எண்ணற்ற
புத்தகங்கள் எழுதி முடிக்கப்பட்டுவிட்டன, இன்னும் எழுதிக் கொன்டும் பலர் இருக்கின்றனர், இன்னும் கியாமத் வரை எழுதத்தான் போகின்றனர்.
காலங்காலமாக கண்ணிலே காத்து வந்த நமது கண்மணி நாயகத்தை எல்லா இஸ்லாமிய
மக்களின் இதயத்திலும் வீற்றிருக்கும் எம்பெருமான் நாயகத்தை, எள்ளளவும் இன்று வரை குறை காண முடியாத நிறைகுடமான நீங்கா இடம் பெற்ற மனிதக்
குல மாணிக்கத்தை, நயவஞ்சகர்கள் இன்று! வரைபடமாக வரைந்து
வானிலே உலக வளையில் பறக்கவிட்டதற்கு உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய உள்ளங்களும்
உருகியது, உதிரங்களும் உறைந்தது , என்றால் மிகையாகாது.
அதுமட்டுமல்ல
வடநாட்டில் வளர்ந்து வந்த இஸ்லாமிய எதிர்ப்பு துவேஷக்காரர்களும், அவர்களின் ஆட்டங்களும் இப்போது எல்லா மாநிலங்களிலும் தலைதூக்கி
வழிபாடு எனும் பெயரில் தரிகெட்டு ஆடுகிறது.
இஸ்லாத்தைச்
சீண்டிப்பார்க்க யாருக்கும் துணிச்சல் வருமா?
இன்றோ இஸ்லாத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்
நபிகள் நாயகத்தையே அவமதிக்கும் அவல நிலை வந்துவிட்டது. இதற்கெல்லாம் காரணம் யார்? யார் பொறுப்பேற்றுக் கொள்வது? இஸ்லாமிய சமுதாய மக்களே! இளைஞர்களே! நாம்
தான் இதற்குக் காரணம்.
இஸ்லாம் மார்க்கத்தை பற்றிப்பிடிப்பவன் ஒரு நாளும் வழிதவற மாட்டான். அதே சமயம்
ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றி பிடித்திருக்கும் வரை எவனும் நம்மை சீண்டிப்
பார்க்கவும் மாட்டான் என்று எடுத்துறைத்தார்களே!
"அன்றி நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்ப(ட்)டு
(உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள்.
அவ்வாறாயின் தைரியத்தை இழந்து, உங்கள் சக்தி (ஆற்றல்) போய்விடும் (அல் குர் ஆன் 8
: 46)
ஒன்றாக இருந்த காலமெல்லாம் இஸ்லாத்தை சீண்டிப்பார்க்க
எண்ணத்துணியாதோர் இன்றோ, எள்ளி நகையாடி ஏளனமாக பேசுவதற்கு இஸ்லாமிய
மக்களே இளைஞர்களே நாமே காரணம்!
கற்றது கையளவு கள்ளாதது உலகளவு என்று கற்றவர்களே கூற இஸ்லாம் மார்க்கத்தில்
படித்தவர்கள் என்று மார்தட்டும் மதம் பிடித்தவர்கள் சிலர், இன்று! கற்றது உலகளவு கல்லாதது வெறும் கடுகளவே என்று கூறி கட்டிப்போட்டு
வைத்திருக்கும் கட்டான இளைஞர்களை முட்டாள்களாக்கி,
படிப்பில்லாத பாமரர்களாகிய நம்மை பாதியில்
இழுத்துக் கொண்டு இன்று வீதியில் விட்டு விட்டு இப்பாரினில் பல ஜமாத்துகளாக (கூட்டங்களாக) போய் விட்டார்களே!
ஒரே இறை, ஒரே மறை நம் சமுதாயத்திற்கு ஒரே நபி என்று
ஒரே ஜமாத்தாக கூட்டமாக வாழ்ந்த நம்மை இரண்டாக பிரித்து, வேறாக காட்டினார்கள், வேறாக கூட்டிச் சென்றவர்கள்தான் ஆணி வேறாக
நின்றார்களா? வேறாகிப் போனவர்கள், நூறாகி அதில் பல பிரட்சனைகள் எழுந்து நொந்து நூலாகிப் போனவர்கள் அதில் பல
கூறாகி, கத்தியை பட்டை தீட்டி கூறாக்கிக் கொண்டிருக்கும் எதிரிகளுக்கு கையில் கொடுத்து
எங்கள் கண்ணிலே குத்துங்கள் என்று சொல்லுவது போன்ற நிலைக்கு நம்மை தள்ளியும்
விட்டு விட்டார்களே! காரணம்.
மணாளனுக்கு
மாலை சூட்டுவதில் மணவறையில் சண்டை, மண்ணறைக்கு தூக்கி செல்லும் மையத்தை வைத்துக்
கொண்டு மையத்தாங்கொல்லையில் சண்டை.
விண்ணும்
மண்ணும், மின்மினி நட்சத்திரமும் போற்றும் கண்மணி
நாயகத்தை போற்றிப் புகழ்வதில் நமக்குள் சண்டை. போட்டிப் போட்டுக் கொண்டு போலீஸ்
ஸ்டேஷன் வரை சென்று காட்டிக் கொடுப்பதில் சண்டை. வணக்க வழிபாடுகளில் சண்டை, வாழ்க்கை நெறி முறைகளில் சண்டை,
யாருக்கும் யாருக்கும் சண்டை? இஸ்லாமியர்களுக்கும் அன்னிய சமயத்தார்களுக்குமா சண்டை? இல்லையே இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமல்லவா சண்டை. ஜோதியாக விளங்கிய நம் இஸ்லாமிய மார்க்கம் மக்களிடையில்
தனித்தனி ஜாதியாக காட்டி ஒரே ஜமாத்தில் பிளவை உண்டாக்கி, ஊரு ரெண்டாகி, குடும்பம் துண்டாகி, இதனால் இஸ்லாம் என்னும் வீடு தூள் தூளாகி விட்டதே!
இதற்கெல்லாம்
யார் காரணம் இஸ்லாமியர்களே! இளைஞர் பெருமக்களே! சிந்தித்துப் பார்க்க நாம்
கடமைப்பட்டுள்ளோம்!
பல தெய்வங்களை வழிபட்ட அரேபியா மண்ணில்
தாண்டோன்றித்தனமான காட்டு அரேபியர்கள் மத்தியில் சிந்தனைச் செம்மலாக சீர்தூக்கிப்பார்த்து, சிந்தையுடன் நேர் வழி நடந்து ஒன்றெ குலம்
ஒருவனே தேவன் என்ற சித்தாந்தத்தை போதித்து சீரிய நடை முறையில் வாழ்ந்து காட்டி
செழுமையடைய செய்துவிட்டு அத்தோடு நம் கையில் புனித குர் ஆனையும், ஹதீஸையும் தந்துவிட்டு சென்ற தாஹா நபிக்கு நாம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா?
ஹதீஸ்களை வைத்துக் கொண்டு ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துக்
கொண்டு, மஸலாக்கள் என்னும் பெயரில் நாளுக்கு நாள் அதை
கொன்றுக் கொண்டு, இப்போது நாற்றமடைந்து கிடப்பது நாடறிந்த
உண்மையாகி விட்டது. ஏற்றமுடைய ஹதீஸ்களை நாற்றமடைய செய்த நயவஞ்சகர்களை நாம்
அடையாளம் காண வேண்டுமாயின் இளைஞர்களே! இனி நமக்கு ஹதீஸ்களை ஆய்வு என்ற
பெயரில் எடுத்துக்காட்டி நம் எண்ணத்தை மாற்றவும் நினைத்தாலும், அல்லாஹ் தந்த அறிவு என்ற ஆற்றலையும் பயன்படுத்தக் கூடிய காலகட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றோம்.
அதனால்,
1.குர் ஆன் 2.ஹதீஸ் 3.இஜ்மாவு 4.கியாஸ். இந்த நான்கைப் பற்றி நாம் தெரிந்துக்
கொள்ள வேன்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
குர் ஆன்:-
தொடரும்.....
No comments:
Post a Comment